Tuesday, November 22, 2011

புதிதாய் ஒரு காதல்! (பாகம் - 1)

சில்லென்று குளிர் காற்று வீசி கொண்டிருந்த மாலை வேளையில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அந்த சாரல் மழையில் நனைந்த படி வந்து கொண்டிருந்தான் இக்கதையின் நாயகன். அவன் பெயர் கதிர்வேல். அவன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதம் முதலாம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறான். கதிர்வேலின் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவனுடைய அப்பா பெயர் செல்வராகவன், அம்மா கோமதி, தங்கை மாலதி, தம்பி பிரபாகர். கதிர்வேலின் குடும்பம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். வருமானம் பார்த்தால் மாதம் ரூபாய் 5000 மட்டுமே. அப்பா பிரபாகர் ஒரு இரும்பு பட்டறையில் கூலி வேலை பார்க்கிறார். தங்கை வீட்டின் அருகில் உள்ள கார்மேன்ட்சில் தையல் வேலை பார்க்கிறாள். தம்பி +2 படித்து கொண்டிருக்கிறான். அம்மா வீட்டு வேலை செய்யவே சரியாக இருந்தது. கதிர்வேல் மட்டுமே இவருடைய பரம்பரையலே முதல் பட்டதாரி ஆக போகிறார்.

- தொடரும் .....

No comments:

Post a Comment