Tuesday, November 22, 2011

புதிதாய் ஒரு காதல்! (பாகம் - 2)

இப்படிஎல்லாம் கதிர்வேல் அந்த சாரல் மழையில் நனைந்த படி தன் குடும்பத்தை பற்றி நினைத்து கொண்டிருந்தான். மழை நின்றது. கதிர்வேல் தன் வீட்டின் தெருவை நெருங்கினான். டேய் கதிர்வேலு! என்று ஒரு குரல்! எங்கடா போயிட்டு வர்ற என்று விஷ்ணு கேட்க! சினிமாவுக்கு போய்ட்டு வர்றேண்டா என்று சொன்னான். ஆம்! விஷ்ணு கதிர்வேலின் நண்பர்களில் நெருங்கிய நண்பன். விஷ்ணுவுக்காக கதிர்வேல் என்ன வேண்டுமானாலும் செய்வான் கதிர்வேல். அதே போலே அவனும். என்ன விட்டுட்டு போயடீள்ள சினிமாவுக்கு என்றான் விஷ்ணு. கதிர்வேல், இல்லடா! காலேஜ் மதியம் வரைக்கும்தான்! அதான், காலேஜ் பசங்களோட போனேன் என்றான். ஓகே டா! நீ சாப்புட்டு ரெஸ்ட் எடு. நான் நாளைக்கு வர்றேன் என்றான் விஷ்ணு. கதிர்வேல் வீட்டில் நுழைந்தவுடன் அவன் அம்மா டாய்! கதிர்வேலு அப்பா இன்னும் வீட்டுக்கு வரல. மணி இப்போ 11 மேல ஆகிருச்சு! எனக்கு பயமா இருக்கு டா என்றால் கதிர்வேளின் அம்மா. எங்கம்மா போயிருக்காறு என கேட்டான். தங்கசிக்கு உடம்பு சரி இல்லடா. டாக்டர்கிட்ட காமிக்க ரூபா இல்லடா அதான் ஒரு 500 ரூபா யார்கிட்டயாச்சும் கடன் வாங்கிட்டு வர சொன்னேன். 8 மணிக்கு போனவரு இன்னும் வீட்டுக்கு வரல. ஓகே மா! நான் பார்த்துட்டு வர்றேன் என்று கிளம்பினான் கதிர்வேல்.
- மலரும் .....

No comments:

Post a Comment